Saturday, 24 December 2022

நன்றிகள் பல....🙏🙏

18.12.2022
நன்றிகள் பல....🙏🙏

தஞ்சை தலைநகரத்தின் புகழ்பெற்ற வினோதகன் நினைவு மருத்துவமனை, நட்புறவு நலசங்கம், பாதம் அமைப்பு, தந்தை பெரியார் நடைப்பயிற்சி நண்பர்கள் வட்டம் இணைந்து நடத்திய குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர்
க.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களது 24.12.2022 💐"பிறந்தநாளை"முன்னிட்டு இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.

சுமார் 200 பேருக்கு மேல் பயனடைந்தார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நமது பகுதியில் வாழும் மக்கள் ஏறத்தாழ "கொலஸ்ட்ரால் , சுகர் "அதிகமாக கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஆலோசனை வழங்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். 

முகாம் சிறப்பாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கிய எங்கள்
தொகுதியின் ஒளிவிளக்கு குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர் க.அன்பழகன் அவர்கள், மருத்துவ நிபுணர்கள்:
Dr.சிஜூஜோசப், Dr.சரத், Dr.S.வினோதாஸ்ரீ, Dr.D.கிருத்திகா,
Dr.மகேஸ்வரி தங்கவேல்,
Dr.K.தேன்மொழி

சிறப்பு விருந்தினர்கள்:
Y. ஜாபர் சித்திக் டிஎஸ்பி, காவல்துறை
திருவிடைமருதூர் உட்கோட்டம்
குடந்தை யூனியன் துணைத் தலைவர் உள்ளூர் T.கணேசன்
எஸ்.கே.ஸ்ரீதரன் MSc LLB.,
மாமன்னர் ராஜ ராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் பம்பைப்படையூர்.
முனைவர் க.சரவணன் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
B.பிரகாஷ் நிறுவனத் தலைவர்
மக்கள் மேம்பாட்டு அமைப்பு,  
ராஜசேகர் திருவிடைமருதூர் தாலுக்கா தலைவர் மற்றும் நிர்வாகிகள் தமிழ்நாடு.
ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன்
ஊராட்சி மன்ற தலைவர் பெண்ணின் பெருமை மஞ்சுளா செந்தில்குமார்,
திருமதி.அனுசியா கஜபதி ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் எங்கள் செல்லப்பிள்ளை D.நீலமேகம், K.ராஜேந்திரன் துணைத் தலைவர்,
K.செந்தில்குமார் வர்த்தக அணி அமைப்பாளர் திருவிடைமருதூர் வடக்கு , சரவணன் காமாட்சி பவன் தாங்கள் அனைவரும் வருகை தந்து ஒத்துழைப்பு நழுகியதற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.. 

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர் 
நட்புறவு நல சங்கம் மற்றும்
பாதம் அமைப்பு தலைவர்
நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர் பட்டிமன்ற நடுவர்,
நடைப்பயிற்சி நண்பர்கள் வட்டம்
அம்மாசத்திரம் 
குடந்தை.

பேராசிரியர் நூறாவது பிறந்தநாள்



‌                                         19.12.2022
💐💐எங்கள் இதயத்தில் குடியிருக்கும் இனமான பேராசிரியர் பெருந்தகை இன்று "நூறாவது  பிறந்தநாள்" நினைவு கூறும் வகையில்  உலகத் தமிழர்களின் செவிக்கு விருந்தாய் ஒளித்துக் கொண்டிருக்கும்  தாங்களை போற்றி வணங்குகிறோம் ..🙏

இங்கனம்:
     முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
     நிறுவனத் தலைவர் 
     நட்புறவு நல சங்கம் 
     அம்மாசத்திரம்
     குடந்தை.

இலவச இருதய சிகிச்சை முகாம்...

Monday, 12 December 2022

குடந்தை மாநகரத்தின் முதல் குடிமகன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

9.12.2022
 

💐💐வாழ்த்துகின்றோம்.. பல நூறு  ஆண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்💐💐

தமிழுக்கு அழகு கொண்டவரே!
தமிழ் அழகுக்கு
சொந்தம் கொண்டவரே!
குடந்தை மாநகரத்தின் முதல் குடிமகன் சொல்லுக்கு சொந்தம் கொண்டவரே!
எங்கள் உள்ளத்தில் குடி கொண்டவரே
சோழ தேசத்திற்கு கதிரவனாய் ஒளி தருபவரே! மழையிலும் புயலிலும் ஓயாமல் உழைப்பதினால் உழைப்பின் வள்ளலாய்  உயர்ந்தவரே!
நகரம் அறியும் நற்குணம் கொண்டவரே !
"ஆறடி உயரம் கொண்டவரே
அழகான சுருள் முடி கொண்டவரே
முறுக்கு மீசை கொண்டவரே"
பூ மல்லிகை போல்
புன்னகை முகம் கொண்டவரே!
நதி போல் வருபவரே!
அருவி போல் அன்பை அள்ளித் தருபவரே!
மக்களுக்காக
மலை போல் நிற்பவரே!

அஞ்சா நெஞ்சம் கொண்டவரே!
அரசியல் பயணத்தில் கசப்பை கடந்து, கனியை சுவைக்க வந்தவரே! 
இன்று போல் என்றும் இளமையோடு 
மேகங்கள் போல் சுழன்று  வருபவரே! 
வானம் பொழிந்திட, பூமி குளிர்ந்திட எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திட வாழ்வாங்கு வாழ்ந்து நோயில்லா வாழ்வும், மாறா உள்ளம் கொண்டு வாழ்க பல்லாண்டு..
      🙏 ... நன்றி வணக்கம் ...🙏

இங்கனம்:
       முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
       நிறுவனத் தலைவர்
       நட்புறவு நல சங்கம்
       அம்மாசத்திரம் 
       குடந்தை.

திரு U.கரிகாலன் BA.BL பிறந்தநாள் வாழ்த்துக்கள்

12.12.2022

💐வாழ்த்துகின்றோம்..💐

சோழமண்டலத்தில் பிறந்து
காவிரியில் நீராடி
கரைபுரண்டு ஓடும் காவிரியில்
நாணல் போல் நிமிர்ந்து நிற்கும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் வழக்கறிஞர் நட்புறவு நல சங்கத்தின் சட்டஆலோசகர் 
திரு U.கரிகாலன் BA.BL
வழக்காடு மன்றத்தில் நீதியை நிலைநாட்டி... 
பாமர மக்களின்
மனதில் குடியிருக்கும் தாங்கள் இன்று போல் என்றும் இளமையோடும், நோயில்லா வாழ்வும், குறைவில்ல அன்பும் ,மாறா உள்ளம் கொண்டு நெற்கதிறாய் வலம் வந்து வாழ்க பல்லாண்டு..

இங்ஙனம்:
முனைவர்.ஏ.எஸ்.மூர்த்தி
                    நிறுவனத் தலைவர்
                    நட்புறவு நல சங்கம்
       ‌ அம்மாசத்திரம்
                   குடந்தை.

Friday, 2 December 2022

"டாக்டர் கி.ஐயா வீரமணி" 90 வது பிறந்தநாள்

2.12.2022


           💐 ஐயா .மானமிகு 💐
தமிழின தலைவர் சட்ட நிபுணர்
     "டாக்டர் கி.ஐயா வீரமணி"
90 வது பிறந்தநாள் காணும், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் குடியிருக்கும்.. கடலூரில் பிறந்து… கடலில் நீந்தி கடலை வென்று..கருப்பு ஆடை அணிந்து, கழகம் காத்து காலம் வென்று,  பெரியார் வழி நின்று.. தமிழுக்கு குரல் கொடுத்து, தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்து தடாவை தகர்த்தி  தரணிக்கு புகழ் சேர்த்து... எளிமையாக வாழ்ந்து முதுமையிலும்  ...இளமையாக... சுட்டரிக்கும் வெயிலிலும்..,
சூறாவளி சுற்றுப்பயணம் செய்து...உலகத் தமிழர்களின் தந்தையாகவும் சமத்துவத்தின் தாயாகவும் மனிதநேய மண்ணின் மைந்தனாகவும் இன்னும் பல நூறாண்டு காலம்  "வாழ்க " என்று வாழ்த்த  வயதில்லை  வணங்கி மகிழ்கின்றோம்...

           🙏.நன்றி வணக்கம்.🙏
           
 இங்கனம்:           
               முனைவர்.ஏ.எஸ் .மூர்த்தி
                 நிறுவனத் தலைவர் 
                 நட்புறவு நலச்சங்கம்  
                 அம்மாசத்திரம் 
                 குடந்தை.

Thursday, 1 December 2022

வீரசேகரனே....! பூமாதேவியே பொறாமை கொள்ளும் பொறுமை குணம் கொண்டவரே...!

19.11.2022 


வாழ்த்துகின்றோம் ..!வாழ்த்துகின்றோம்...!💐💐

சோழமண்டலத்தில் பிறந்து காவேரியில் நீராடி;
கரைபுரண்டு ஓடும் காவிரியில்... "நாணல்"  போல் நிமிர்ந்து நிற்கும்
எங்கள்நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு சகோதரர் 
அண்ணன்  "வீரசேகரன்" என்ற பெயர் கொண்டவரே...
பல வெற்றிகளை கண்டவரே..
தடா சட்டத்தை வென்று , வீரம்  விளைந்த வீரசேகரனே...
நெல் கதிராய் வலம்  வருபவரே... சுயமரியாதை  இயக்கத்தில் சுழன்று வருபவரே.. 
நாடறியும்  நல்லவரே...  
செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு கொண்டவரே... 
வழக்காடு மன்றத்தில் வாதாடி நீதியை வென்று வந்த வீரசேகரனே....! பூமாதேவியே பொறாமை கொள்ளும் பொறுமை குணம் கொண்டவரே...! அனைவருக்கும் பொழியும் கார் மேகம் போல கருணை உள்ளம்  கொண்டவரே... 
எல்லோரையும் மகிழ்விக்கும் வானவில் போல யாவரையும் குளிர வைக்கும் நிலவு போல கண்கொள்ளாக் காட்சி தருபவரே...

தன்னலமற்ற சமுதாய சிந்தனை கொண்டவரே ..
வீட்டுக்கு ஒருவர் போதாது என்று
மருத்துவ திலகம் "வசந்தியை" மணந்தவரே...
மக்கள் நலம்  காப்பவரே...
நன்மக்களைப்  பெற்ற மகராசரே..!
அவர்களையும்  மக்களுக்காக அர்ப்பணித்த தயாள குணம் கொண்டவரே ...
தமிழினத் தலைவரை 
ஐயா "கி.வீரமணியை" தலைவனாக கொண்டு அவர் வழி நின்றவரே...
தரணியின் தலைநகரத்தில் மாளிகை அமைத்து ஐயாவின் பொற்கரங்களால்  திறப்பு விழா செய்தவரே...
தாங்கள் இன்று போல் என்றும் நோயில்லா வாழ்வும் குறைவில்லா அன்பும் , மங்கா செல்வம்கொண்டு மாறா உள்ளம் கொண்டு வாழ்க என்று  வாழ்த்துகின்றோம்.... , 
வணங்கி மகிழ்கின்றோம்..🙏🏼

இங்கனம் :
முனைவர் ஏ.எஸ் .மூர்த்தி 
மருத்துவர் .அருள் முருகன்
திருமதி .ரோகினி மற்றும்   குடும்பத்தார்கள் 
அம்மாசத்திரம்,
குடந்தை.