Saturday, 24 December 2022
நன்றிகள் பல....🙏🙏
பேராசிரியர் நூறாவது பிறந்தநாள்
Monday, 12 December 2022
குடந்தை மாநகரத்தின் முதல் குடிமகன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திரு U.கரிகாலன் BA.BL பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Friday, 2 December 2022
"டாக்டர் கி.ஐயா வீரமணி" 90 வது பிறந்தநாள்
Thursday, 1 December 2022
வீரசேகரனே....! பூமாதேவியே பொறாமை கொள்ளும் பொறுமை குணம் கொண்டவரே...!
Tuesday, 29 November 2022
பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்
மக்களுக்காக சுந்தரமா | சுந்தரத்திற்காக மக்களா
Monday, 28 November 2022
இலவச கண் சிகிச்சை முகாம் 19.11.2022
Wednesday, 23 November 2022
சுயநலமில்லா சொல்லின் செல்வரே...
ஆசிரியர் தின விழா
எங்கள் பெருமைமிகு ஐயா எஸ். கே. அவர்களுக்கு வெற்றிலை மாலை
அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் அவர்களுடன் திரு. மூர்த்தி அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து
Wednesday, 13 April 2022
Saturday, 9 April 2022
கும்பகோணம் நல்ல கும்பகோணம் !
கும்பகோணம் நல்ல கும்பகோணம் !
கும்பகோணத்தில்.....
• பெரிய கடை தெருவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்களமாக இருக்கும்.
• ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.
• மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபே-யின் முறுகல் மாவு தோசை + சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.
• சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ். இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும் . கும்பகோணத்தில் இன்றும் பூரியை Boori என்றுதான் அழைப்பார்கள்...!
• கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல்.
இப்போது hifi ஆக மாறிவிட்டது.
அதன் காபி......டம்ளரை கீழே வைக்க மனமே வராது.
• சாரங்கபாணி கோயில் அருகே உள்ள மாமி மெஸ். இங்கே காலையில் கீரை வடை. மதியம் சாப்பாடுக்கு இடம் கிடைக்காது. அப்படி இடம் பிடித்து மசால் வடையுடன் சாப்பாடு... அப்பப்பா... என்ன சுவை !
• நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ்..
இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்.
இங்கு மட்டும் வாழை இலை கிடையாது.
வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி.
இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும்.
so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.
• பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம்.
அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.
இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி.
அதற்கு ஊற்றிக்கொள்ள அந்தக்கால injection பாட்டிலில் நல்லெண்ணெய்.
• இதில் எந்த ஹோட்டல் சென்றாலும் எது சாப்பிட்டாலும் முடிவு என்பது காபியோடுதான் என்பது எழுதப்படாத சட்டம் !
• காரசராமான டிபன் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவாமல் வாய் கொப்பளிக்காமல் காபியை அப்படியே வாயில் சரித்துக்கொள்ளும்போது நம் நாக்கின் சுவையானது.... இன்னும் கொஞ்சம் காரமாகி மூன்றே நொடிகளில் இனிப்புக்கும் மாறும் அந்த நேரம் இருக்கிறதே...! அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் !
படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்... பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!
PDG.Dr.குணசேகரன். M.D.,M.Sc (YHE)
படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்...
பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!
********
வாழ்க்கை என்பது என்ன??
நிகழ்வுகளின் தொகுப்பு..
நாட்களின் அணிவகுப்பு..
வெற்றி தோல்விகளின் பிரதிபலிப்பு..
சுக,துக்கங்களின் குவிப்பு..
குடும்பம், சொந்தங்களின் அலங்கரிப்பு..
பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள டைரிக்குறிப்பு..
நட்பு, பகைகளின் இணைப்பு..
லாப,நட்டங்களின் கலப்பு..
பிள்ளைகள் பிறப்பு தொடங்கி வளர்ப்பு வரை உள்ள காலப்பரப்பு..
இதில் என்ன அர்த்தம் உள்ளது??
பல கோடி உயிர்கள் வாழ்ந்து மடிகின்றன..
அடுத்தவர் யாருக்கும் தெரியாமல்..
வந்ததும் தெரியாது..
போனதும் தெரியாது...
வரும் காரணம் என்ன??
செய்யும் காரியம் என்ன??
நமக்கான கடமை தான் என்ன??
நன்கு படித்து, பணம் சேர்த்து, சொத்து குவித்து, குடும்பம் செழிக்க வாழ்ந்தால் அது தான் வெற்றியா??
விரும்பும் பொருள் வாங்கி, விரும்பிய வாழ்க்கை வாழ்ந்து, இலக்கு இல்லாமல் நிகழ் கால சந்தோஷங்களில் மட்டும் வாழ்ந்தால் அது தான் மகிழ்ச்சியா??
வசதிகள் கிடைக்காமல், பணம் முதல் படிப்பு வரை அனைத்துக்கும் கஷ்டப்பட்டு கடைசி வரை ஆசைகள் நிறைவேறாமல், மறந்து போக வாழ்ந்தால் அது தான் தோல்வியா??
ஏமாற்றியாவது பணம் சேர்த்து, துரோகம் இழைத்து சொத்து வாங்கி, அடுத்தவன் வயிறு எரிய பகட்டு வாழ்க்கை வாழ்ந்தால் அது தான் புத்திசாலித்தனமா??
கடவுள் பக்தியோடு காலம் முழுதும் இருந்து, கண் மூடும் நேரம் வரை கடவுள் பணிக்காக வாழ்ந்தால் மட்டும் தான் புனிதமா??
எது தான் உண்மையில் பூரண வாழ்க்கை??
எதை நோக்கி நாம் செல்கிறோம்??
பணமா? பொருளா? இறைவனா?
நம் குடும்பம், நம் சந்ததி செல்வசெழிப்போடு வாழ வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் நோக்கம்..
அடுத்தவன் அழுதாலும்,அழிந்தாலும் பரவாயில்லை, என் குடும்பத்துக்கு ஆடம்பரம் வேண்டும் என்பதே பலரின் பழக்கம்...
முப்பதாயிரம் பேரை ஏமாற்றி மூன்று தலைமுறைக்கு செல்வம் சேர்த்தால் வாழ்க்கை நிறைவானதாக எண்ணம்..
சற்றே சிந்தித்துப் பாருங்கள்..
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற
என்ன செய்யலாம்???
தன் தனிப்பட்ட தேவைகளையும், மகிழ்ச்சிகளையும் தாண்டி,
ஒருவரால் அடுத்தவர் யாரையும் காயப்படுத்தாமல்,
கண் கலங்க வைக்காமல்,
ஏமாற்றாமல்,
எத்தனையோ நபர்களுக்கு,
எத்தனையோ உயிர்களுக்கு உதவியாய் வாழ முடிகிறதென்றால்
அதுவே பூரணமான வாழ்க்கை..
அது பண உதவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை..
அது மன உதவியாகவோ,
வழிநடத்தும் உதவியாகவோ,
வாழ்வு தரும் உதவியாகவோ இருக்கலாம்..
பிறரிடம் உண்மையாக இருப்பதும், உண்மையாக நடப்பதும் நாம் அவர்களுக்கு செய்யும் ஓர் உதவி தான்..
உயிர்களுக்கு உதவினால் உயிர் வாங்கி வந்த உலகில் உயர்வாக உயர்ந்து நிற்கலாம்..
பல்லாயிரம் மனிதர்கள் நம்மால் உதவப்பட்டால்
நம் வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் போற்றப்படும்..
பிறருக்கு செய்யும் உதவிகள்
மனதுக்கு நிறைவு தரும்..
இறைவனுக்கு அருகில் அழைத்து செல்லும்..
உள்ளத்தில் தன்னம்பிக்கை மிளிரும்..
தலைமைப் பண்பு வளரும்..
கருத்து தெளிவு பிறக்கும்..
முடிவெடுத்தல் திறன் திறம்படும்...
வாழ்க்கை அழகாகும்..
அனைவருக்கும் உதவுங்கள்
வாழ்க்கையை வாழுங்கள்
உதவிகள் விதைகள்..
உலகமே வயல்..
எண்ணிப் பார்க்காமல் உதிர்க்கப்படும் விதைகள் தான்..
மணிமணியாய் நன்கதிர்களாய் மாறும்..
வாழ்க்கை விவசாயத்தில் மகசூல் பெருகும்..
வாருங்கள்..
உதவுங்கள்..
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கலாம்..
















