Saturday, 9 April 2022

படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்... பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!

 PDG.Dr.குணசேகரன். M.D.,M.Sc (YHE)

 படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்...

பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!

********

வாழ்க்கை என்பது என்ன??

நிகழ்வுகளின் தொகுப்பு..

நாட்களின் அணிவகுப்பு..

வெற்றி தோல்விகளின் பிரதிபலிப்பு..

சுக,துக்கங்களின் குவிப்பு..

குடும்பம், சொந்தங்களின் அலங்கரிப்பு..

பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள டைரிக்குறிப்பு..

நட்பு, பகைகளின் இணைப்பு..

லாப,நட்டங்களின் கலப்பு..

பிள்ளைகள் பிறப்பு தொடங்கி வளர்ப்பு வரை உள்ள காலப்பரப்பு.. 


இதில் என்ன அர்த்தம் உள்ளது?? 


பல கோடி உயிர்கள் வாழ்ந்து மடிகின்றன..

அடுத்தவர் யாருக்கும் தெரியாமல்..

வந்ததும் தெரியாது..

போனதும் தெரியாது... 


வரும் காரணம் என்ன??

செய்யும் காரியம் என்ன??

நமக்கான கடமை தான் என்ன?? 


நன்கு படித்து, பணம் சேர்த்து, சொத்து குவித்து, குடும்பம் செழிக்க வாழ்ந்தால் அது தான் வெற்றியா?? 


விரும்பும் பொருள் வாங்கி, விரும்பிய வாழ்க்கை வாழ்ந்து, இலக்கு இல்லாமல் நிகழ் கால சந்தோஷங்களில் மட்டும் வாழ்ந்தால் அது தான் மகிழ்ச்சியா?? 


வசதிகள் கிடைக்காமல், பணம் முதல் படிப்பு வரை அனைத்துக்கும் கஷ்டப்பட்டு கடைசி வரை ஆசைகள் நிறைவேறாமல், மறந்து போக வாழ்ந்தால் அது தான் தோல்வியா?? 


ஏமாற்றியாவது பணம் சேர்த்து, துரோகம் இழைத்து சொத்து வாங்கி, அடுத்தவன் வயிறு எரிய பகட்டு வாழ்க்கை வாழ்ந்தால் அது தான் புத்திசாலித்தனமா?? 


கடவுள் பக்தியோடு காலம் முழுதும் இருந்து, கண் மூடும் நேரம் வரை கடவுள் பணிக்காக வாழ்ந்தால் மட்டும் தான் புனிதமா?? 


எது தான் உண்மையில் பூரண வாழ்க்கை??

எதை நோக்கி நாம் செல்கிறோம்??

பணமா? பொருளா? இறைவனா? 


நம் குடும்பம், நம் சந்ததி செல்வசெழிப்போடு வாழ வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் நோக்கம்..

அடுத்தவன் அழுதாலும்,அழிந்தாலும் பரவாயில்லை, என் குடும்பத்துக்கு ஆடம்பரம் வேண்டும் என்பதே பலரின் பழக்கம்...

முப்பதாயிரம் பேரை ஏமாற்றி மூன்று தலைமுறைக்கு செல்வம் சேர்த்தால் வாழ்க்கை நிறைவானதாக எண்ணம்.. 


சற்றே சிந்தித்துப் பாருங்கள்.. 


வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற

என்ன செய்யலாம்??? 


தன் தனிப்பட்ட தேவைகளையும், மகிழ்ச்சிகளையும் தாண்டி,

ஒருவரால் அடுத்தவர் யாரையும் காயப்படுத்தாமல்,

கண் கலங்க வைக்காமல், 

ஏமாற்றாமல், 

எத்தனையோ நபர்களுக்கு, 

எத்தனையோ உயிர்களுக்கு உதவியாய் வாழ முடிகிறதென்றால் 

அதுவே பூரணமான வாழ்க்கை..


அது பண உதவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை..

அது மன உதவியாகவோ, 

வழிநடத்தும் உதவியாகவோ, 

வாழ்வு தரும் உதவியாகவோ இருக்கலாம்..

பிறரிடம் உண்மையாக இருப்பதும், உண்மையாக நடப்பதும் நாம் அவர்களுக்கு செய்யும் ஓர் உதவி தான்.. 


உயிர்களுக்கு உதவினால் உயிர் வாங்கி வந்த உலகில் உயர்வாக உயர்ந்து நிற்கலாம்..

பல்லாயிரம் மனிதர்கள் நம்மால் உதவப்பட்டால் 

நம் வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் போற்றப்படும்.. 


பிறருக்கு செய்யும் உதவிகள்

மனதுக்கு நிறைவு தரும்..

இறைவனுக்கு அருகில் அழைத்து செல்லும்..

உள்ளத்தில் தன்னம்பிக்கை மிளிரும்..

தலைமைப் பண்பு வளரும்..

கருத்து தெளிவு பிறக்கும்..

முடிவெடுத்தல் திறன் திறம்படும்...

வாழ்க்கை அழகாகும்..

அனைவருக்கும் உதவுங்கள்

வாழ்க்கையை வாழுங்கள் 


உதவிகள் விதைகள்..

உலகமே வயல்..

எண்ணிப் பார்க்காமல் உதிர்க்கப்படும் விதைகள் தான்..

மணிமணியாய் நன்கதிர்களாய் மாறும்..

வாழ்க்கை விவசாயத்தில் மகசூல் பெருகும்..

வாருங்கள்..

உதவுங்கள்..

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கலாம்..