Saturday, 9 April 2022

மாநில தலைமை நிலைய செயலர் சகோதரர் அறிவுடை நம்பி - கள் திருமண வரவேற்பு விழா

கே .ஆர் .ராமசாமி நகரை முகவரியாக கொண்டு நமது அம்மா சத்திரத்திற்கு அடையாளமாக பவனிவரும் எங்கள் மாநில தலைமை நிலைய செயலர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எங்கள் அன்புக்கினிய சகோதரர் அறிவுடை நம்பி திருமதி .கோதை நாச்சியார் ஆசிரியர் உங்கள் மகள் திருமண வரவேற்பு விழாவில் குடந்தை மாநகரத்தில் மூர்த்தி கலையரங்கமே பெருமை கொண்டது. நாங்கள் அதை ஒரு பெரும் விழாவாக கண்டு மகிழ்ந்தோம். ஆசிரியர் பெரு மக்களும், அரசியல் தலைவர்களும் ,ஆன்மீக ஆசான்கள், மேடையில் வாழ்த்து மழை பொழிந்தனர் அது சமயம் வெளிப்புறத்தில் முக்கோடி தேவர்கள் ஆசிபெற்று வானத்திலிருந்து மிக கன மழை பொழிந்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தோடு தாங்கள் பொருளை நேசிப்பதை விட மக்களை எந்த அளவிற்கு நேசித்தீர்கள் என்பதற்கு இது ஒரு சான்று அந்த மக்கள் வெள்ளத்திலும் எங்களை அடையாளம் கண்டு எங்களுக்கும் சிறப்பு செய்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு மணமக்களை பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறோம்