அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக, அம்மாசத்திரம் ஊராட்சி சிவன்கோவில் மேல வீதியில், பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் – கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள், ஒன்றிய அவைத் தலைவர் பி.அபிராமிசுந்தரம் அவர்கள், துணைச் செயலாளர்கள் மா.இராமச்சந்திரன் அவர்கள், எம்.எஸ்.யேசுதாஸ் அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் வி.கோவிந்தராஜன் அவர்கள், க.நேரு அவர்கள், க.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மார்க்கெட் சி.சங்கர் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள், அறிவழகன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முருகன் அவர்கள், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தெ.நீலமேகம் அவர்கள், சோழபுரம் பேரூர் திமுக செயலாளர் ஜெ.ஜெபுருதீன் அவர்கள், நட்புறவு நலச் சங்கத் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்கள் மற்றும் இயக்குநர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.