08/10/2022
ஆசிரியர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த எங்கள் தொகுதியில் இருள் நீக்கி ஒளி தந்த குடந்தை சட்டமன்ற உறுப்பினர் *முனைவர் க. அன்பழகன்* அவர்கள் 85 ஆசிரியர் பெருமக்களுக்கு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றினை தெரிவித்துக் கொள்வதோடு
இந்த விழா சிறப்பாக அமைவதற்கு ஆலமரமாய் நிழல் தந்து அறுசுவை உணவு தந்து ஆசிரியர்களுக்கு விருது தந்து அருவி போல் அன்பை தந்து சரித்திரம் படைத்திட சாதனை புரிந்திட இறைமறை இவை இரண்டும் வாழ்வின் மெய்ப்பொருள் ஆக்கட்டும் ஏற்றமிகு கருணை உள்ளம் கொண்டு கலங்காத நெஞ்சம் கொண்டு அனைவருக்கும் பொழியும் கார்மேகம் போல எல்லோருக்கும் மகிழ்விக்கும் வானவில் போல யாவரையும் குளிர வைக்கும் நிலவு போல
நெற்கதிராய் பவனி வந்து நம்மை வரவேற்ற மாஸ் குழுமத்தின் *தாளாளர் ஐயா S.விஜயகுமார்* அவர்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு
ஆசிரியர் தின விழாவை குடந்தை மாநகரமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் அமைந்ததற்கு மூன்று முத்துக்களாக திகழ்ந்த நமது கல்லூரியின் முதல்வரும், தகை சார் விருது குழு தலைவரும் *முனைவர் K.சரவணன்* அவர்களும் பாதம் அமைப்பின் நிறுவனரும், தகை சார் விருது குழு செயலரும் நகைச்சுவை பட்டிமன்ற நடுவரும் *நாவலர் K.செந்தில்குமார்* அவர்களுக்கும், விருது குழு பொருளர் *R. ரவிக்குமார்* அவர்களுக்கும். கல்வி புரவலர் * டான் S. சிங்காரவேல் அவர்களுக்கும்.* அன்னபூர்ணா உணவகம் உரிமையாளர் *N. முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும்.* குடந்தை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் *T. கணேசன் அவர்களுக்கும்.* தேசிய நல்லாசிரியர் *கா. பன்னீர்செல்வம் அவர்களுக்கும்.*
இந்த அருமையான தருணத்தில் நன்றி பாராட்டி ஆசிரிய பெருமக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று விழாவினை சிறப்பித்ததற்கு *மாஸ் குழுமம், பாதம் அமைத்து, மற்றும் நட்புறவு நல சங்கம்.*
சார்பாக எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றினை தெரிவித்துக் கொள்வதோடு
மாஸ் குழுமம் மேலும் வளம் பெற நமது ஆலோசனைகளை வழங்கி ஆழம் விழுதுகள் போல் நிற்போம் என்பதை இந்த அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொண்டு அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வரும் தைத்திருநாளில் *ஆசிரியர்களுக்கும்* *காவல்துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும்* *தூய்மை பணியாளர்களுக்கும்* மற்றும் *சமூக ஆர்வலருக்கும்* சிறப்பு செய்வதற்கு நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.
இங்கனம்.
*முனைவர்.ஏ.எஸ் மூர்த்தி.*
நிறுவனத் தலைவர்.
நட்புறவு நல சங்கம்.
அம்மாசத்திரம்.
குடந்தை.